Header Ads



பாடசாலைகளை 3 தினங்களாக குறைக்கவும்


எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைக்க வேண்டுமென அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம்  யோசனை முன்வைத்துள்ளது. 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்குமிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், தூரப் பிரதேசங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, நடைமுறை சாத்தியமாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டுமென்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.