Header Ads



அரசியலில் முக்கிய திருப்பம், இடைக்கால அரசுக்கு பச்சைக் கொடி காட்டிய SJB, சஜித் தலைமையில் அவசரமாக கூடியது (வீடியோ)


 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(07) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றுகூடியதோடு,தற்போது முகம் கொடுக்கும் நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பது குறித்து நீண்ட கலந்துரையாடலும் இதன் போது இடம் பெற்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கால எல்லைக்கு உட்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக கூட்டு வேலைத்திட்டத்தில் இணைய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன் விசேட ஊடக அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்

No comments

Powered by Blogger.