Header Ads



ஆயிஷா விவகாரம் CID யிடம் ஒப்படைப்பு, இதுவரை 20 பேரிடம் விசாரணை


பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27)  ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை  சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.