Header Ads



சுவிஸ் குடியுரிமையை ரத்துச்செய்து இலங்கை வந்த நான், அரசியலில் இருந்து விடைபெற உள்ளேன் - அழுதபடி கூறினார் கீதா


தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று -20- உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! - அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

கீதா குமாரசிங்க தமது உரையின்போது , தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.

தமது வீடு தாக்கப்பட்டபோது, தாம் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.