Header Ads



தேனீர், பிஸ்கட், குளிர்பானம், கடலை, தானம் வழங்கும் நிகழ்வு

 


பாறுக் ஷிஹான்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(15) மாலை பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை  தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இந்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தானம் வழங்கினர்.

இதே வேளை    களுவாஞ்சிகுடி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையம்  என்பனவும்  வெசாக் தின நிகழ்வினை முன்னிட்டு  பல  ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஏராளமான பொது மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.