Header Ads



கொத்துரொட்டி, ப்ரைட் ரைஸ் விலை உயருகிறது - பிளேண்டி, அப்பம் குறித்து தகவல் இல்லை


எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறயினும் ப்ளேண்டி மற்றும் அப்பம் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.