Header Ads



அலரி மாளிகையில் இனிமேல், ரணிலை காண முடியாதா...?


பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அலரிமாளிகையில் வசிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்.  

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்களுக்கான சம்பளமும், சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.