Header Ads



அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன், மனைவி மீது தாக்குதல்


அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக  கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  காயங்களுக்கு உள்ளான இவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிந்திவெல - மாலிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியுமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டால் தமதுப் பிள்ளைக்கு மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியவில்லை என்கிற ஆத்திரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பதிவொன்றுக்காகவே கணவனும், மனைவியும் தாக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் இளைய சகோதரரே இவ்வாறு தங்களை வீடு புகுந்து தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.