Header Ads



ராஜினாமா செய்யுங்கள் - மஹிந்தவிடம் கூறிய ஜனாதிபதி, திங்கட்கிழமை விசேட அறிக்கையை வெளியிடவுள்ள பிரதமர்




பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக இன்று (06) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

No comments

Powered by Blogger.