ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தார் சஜித்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதி மர்ஹூம் ஷெய்க் கலீபா பின் சயீத் அல் நஹ்யான்அவர்களுக்கான இரங்கல் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச இன்று (17) கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதகரத்திற்குசென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய மக்களுக்கும் தனது இரங்கலைத்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அங்கிருந்த அனுதாப பதிவேட்டில் தமது அனுதாப செய்தியையும்பதிவிட்டார்.
தொடர்ந்து ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவரோடு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்துநீண்ட நேரம் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவைநினைவு கூர்ந்த
எதிர்க்கட்சித் தலைவர்,இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆதரவளிக்குமாறும்அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
Post a Comment