Header Ads



காலில் விழுந்த பிள்ளைகள், நீங்கள் கவலைப்பட வேண்டாமென்று விமலிடம் கூறிய மனைவி - நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு போலியான தகவல்கள் வழங்கி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷீ வீரவங்ச, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு   அழைத்துச் செல்லப்பட்டார். 

அப்போது அவரது கணவன் விமல் வீரவன்ச,  பிள்ளைகள் இருவரும் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். தங்களுடைய தாய், சிறைச்சாலைக்குச் செல்வதற்கு முன்னர் பிள்ளைகள் இருவரும் தாயின் கால்களில் விழுந்து வணங்கினர்.

விமல் வீரவன்சவிடம் மனைவி ஏதோவொன்றை கூறினார். ​அதாவது நீங்கள் கவலைப்படவேண்டாம்.  இரண்டு பிள்ளைகளையும் பார்த்து கொள்ளுங்கள் என்று விமலிடம் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.


No comments

Powered by Blogger.