Header Ads



இலங்கையில் பெண்களுக்கென தனியான சந்தையும், உடற்பயிற்சி வசதியும், பிரத்தியேக நூலகமும் உள்ள ஒரேயொரு ஊர் (வீடியோ)


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது அதேபோல் பெண்களுக்கென தனியாக உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாத்திமா மகளிர் நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாசிகசாலைத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை 17.05.2022 ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.