வெய்யிலில் பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்
- ஹஸ்பர் -
திருகோணமலை- கிண்ணியா பகுதியில் உள்ள எழிலரங்கு மைதானத்தில் எரிவாயு விநியோகமானது இன்று (22) இடம் பெற்றது . மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல மணி நேரங்கள் காத்திருந்த போதும் பலர் வெருங் கையுடன் வீடு திரும்பியதால் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நூற்றுக் கணக்கான மக்கள் எரிவாயு நெருக்கடி காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். ஆனாலும் சிலருக்கு கிடைக்கப் பெறவில்லை வெயிலில் பல மணி நேரங்கள் காத்திருந்ததன் மட்டுமே மிகுதி
.சமையல் எரிவாயுக்காக இதனை நம்பி இருந்த போதிலும் எரிவாயு கிடைக்கவில்லை இதனால் ஏமாற்றமடைந்துள்ளோம் வீடுகளில் சமைப்பதற்கு கூட எரி வாயு இல்லை எரி வாயுக்காக காத்திருந்த தாய் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் எரி வாயுவை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment