Header Ads



இன்றைய தினமும் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது, வரிசையில் காத்திருக்க வேண்டாம்


இன்றைய தினமும் (25) வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.

நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

எவ்வாறிருப்பினும், நாட்டின் பல பாகங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பனவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் தற்போதும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.