தந்தை தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவார், மறைக்க எதுவும் இல்லை, குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திப்போம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் தொடர்ந்து செயற்படுவார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் விரைவில் பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
"எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை, நாங்கள் பொதுமக்களுடன் இருப்போம் மற்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் சந்திப்போம் எனவும் நாமல் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மே 9 ஆம் திகதி வன்முறைகள் நடைபெற்ற பின்னர் கொழும்பில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ஸ திருகோணமலையில் கடற்படை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment