ஆயிஷா படுகொலை, சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும முன்னிலையாகவில்லை
அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்ற சந்தேக நபர் இன்று (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும முன்னிலையாகவில்லை. சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கடத்தப்பட்டு, வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிறுமி மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் ஜனாஸா நல்லடக்கம் நேற்று திங்கட்கிழமை 30 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment