Header Ads



இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம்


இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, முயற்சிக்கும் வேளையில், தமது நாடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மாலைதீவு உறுதியளித்துள்ளது.

மாலைதீவு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கூறியுள்ளளார்.

இந்தநிலையில் இலங்கைக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் மாலைதீவு நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நஷீத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.