Header Ads



மீண்டும் காதல் ஊற்றெடுக்கப் போகிறதா..?


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது ஆதரவை உறுதிப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், கட்சி உறுப்பினர்கள் விக்ரமசிங்கவுடன் ஒரு சந்திப்பை கோரியுள்ளதாகவும், அதற்கான நேரம் மற்றும் திகதியை ஏற்பாடு செய்து தருமாறும் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கப்போவதில்லை என கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில், கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறுவதற்கு பரிசீலித்து வருவதை உணர்ந்து திடீரென தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன தமது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவை திடீரென பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார்.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுள்காலம் முடிவடைந்த பின்னர் இருவரும் மாறிமாறி ஒருவருக்கு எதிராக மற்றுமொருவர் விமர்னங்களை முன்வைத்தனர். போதாக்குறைக்கு மைத்திரிபால சிறிசேன ரணில் குறித்து புத்தகமொன்றை எழுதப் போவதாகக் கூட குறிப்பிட்டிருந்தார்

No comments

Powered by Blogger.