Header Ads



தாய் நாட்டிற்காகப் போராடிய என் மீதான, தாக்குதல் எனக்குக் கிடைத்த தங்கப் பதக்கமாகும் - மொரீன் நூர்


தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது என அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று (10.05.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் தம்மை திட்டி தாக்கியதாகவும் தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். 

தனியாக நின்ற மொரீன் நூர் மீது முன்னாள் பிரதமர் மகிந்த ஆதரவான குண்டர்கள் நேற்று தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவமானது நாட்டில் பரவலாக பேசப்படும் விடயமாக மாறியது.

தனியாக அகிம்சை ரீதியில் போராடிய பெண் மீதான தாக்குதலை பஒலரும் கண்டித்திருந்தனர். அத்துடன் தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது சமூக ஊடகங்களில் வசை மொழி பிரயோகிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.