Header Ads



நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களின் முன்மாதிரி


நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை எமது சபையின் காலம் நிறைவடையும் வரை  மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை  ஒரு நிவாரணமாக அரசுக்கு  வழங்குவதற்கு  ஏகமனதான ஒரு முடிவினை எடுத்துள்ளோம்.

இந்த விடயத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.அத்துடன் இந்த நாட்டில் உள்ள  இந்நெருக்கடி தீர்க்கப்படும் வரை பிரதமர் அவர்கள் ஏனைய  அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் அதில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் கொடுப்பனவினையும் எம்மை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுத்த ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான மே மாதத்திற்காக 4 ஆவது சபையின் 50 ஆவது கூட்டஅமர்வு வியாழக்கிழமை(26)சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில்  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தீர்மானம் எடுப்பதற்கு  அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவு மேற்கொண்டனர்.

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.