Header Ads



ஜனாதிபதி எங்குள்ளார் என்பது தெரியாது, மக்கள் ஒரு நாள் நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்துவார்கள்


மக்களின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வை வழங்கவில்லை என்றால், மக்கள் இணைந்து என்றாவது ஒரு நாள் நாடாளுமன்றத்தை தீயிட்டு கொளுத்துவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று -05- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இரும்பு கம்பிகளை ஊன்றி, இராணுவம் மற்றும் பொலிஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

மக்கள் முற்றுகையிடுவார்கள் என்ற அச்சத்தில் கூடும் நாடாளுமன்றத்தினால் எந்த பயனுமில்லை. மக்கள் வீதியில் இருக்கின்றனர். ஜனாதிபதி தனது செயலகத்திற்கு செல்ல முடியவில்லை.

ஜனாதிபதி எங்கு இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. அமைச்சர்களால் வீதியில் செல்ல முடியவில்லை. பிரதமர் வைபவங்களுக்கு செல்ல முடியவில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.