Header Ads



பாராளுமன்றம் அருகே யுத்தக் களம் - எதற்கும் தயாராக மாணவர்கள், பாதுகாப்பு வாகனங்களும் தயார்


நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் கூடியுள்ளனர். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் கோசங்களை எழுப்பி வருகின்றனர். அப்பகுதி ஒரு யுத்தக் களம் போன்று காட்சியளிப்பதையே இங்கு காண்கிறீர்கள்.

பாதுகாப்புக்காக பொலிசாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளாலான தடுப்பு அரண்களை தகர்த்து, அந்த கம்பிகளின் உதவியுடன், தாம் தங்கியிருப்பதற்கு வசதியான முறையில் மேடைகளை அமைத்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பை அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக தெரிவித்த வண்ணமுள்ளனர். 

 இந்தப் பகுதிக்கு ”ஹொரு கோ கம“ (திருடர்களை துரத்தும் கிராமம்) என பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.