Header Ads



பிரதமர் பதவியை கைப்பற்றி, நாட்டை கட்டியெழுப்ப முடியாது - சஜித் தெரிவிப்பு


சியம்பலாபிட்டிய நாடக" பாணியிலான முறைமையின் கீழ் பிரதமர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றி  நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

இளைஞர் பாராளுமன்ற அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான யோசனைகளை இளைஞர் பாராளுமன்றத்தினர் எதிர்க்கட்சி தலைவரிடம் முன்வைத்தனர்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இளைஞர்களின் பங்களிப்பு ஆத்தியாவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஒத்துழைப்புடன் கூடிய ஆட்சியின்றி நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் சமூக ஜனநாய முறையின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் காலவதியான முறையின் ஊடாக ஒரு அங்குலமேனும் நாடு முன்னேற்றமடையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.