Header Ads



#GoHomeGota2022 - இன்று சனிக்கிழமை அதிகளவு மக்கள், வருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பு

 

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ வீட்டுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினமான சனிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என நம்பப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையிலும் காலிமுகத் திடல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.


No comments

Powered by Blogger.