Header Ads



6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் - தொழிற்சங்கம் தெரிவிப்பு


எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அரசு,  தனியார் மற்றும் தோட்டத் துறையைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு  எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.