Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மதிய உணவை நிறுத்துங்கள் - 53 Mp க்கள் சபாநாயகரிடம் முறையீடு


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஒரு வேளை உணவு கூட உண்ண முடியாமல் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ள இவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு பெருமளவு பணம் செலவு செய்வது அநியாயமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகல் முழுவதும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது மாத்திரம் சந்தை விலையில் பார்சல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.