50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்தவர், விசேட அதிரடிப்படையினரால் கைது
50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர் ஒருவர் வெளிநாட்டு ஆகக்குறைந்ததாக 10,000 அமெரிக்க டொலர்களையே தமது கையில் வைத்திருக்க முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment