Header Ads



விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் - 3 மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையம் செல்லுங்கள்




ஊரடங்கு காலப்பகுதியினுள், விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கான அறிவித்தல் ஒன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ளது.

ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய விமான பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தமுடியும் என்றும்,  விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் தமது கடவுச்சீட்டினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக உபயோகிக்க முடியும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது., 

வெளிநாடு செல்பவர்கள், விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.