Header Ads



பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா - 106 பக்க விசாரணை அறிக்கையை வெளியிடாமல் மறைத்துள்ளனர்


கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பிரபலமான மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்திடம் இருந்து அன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவர்களில் ஒருவர் எனவும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று -03- தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகளை பகிரங்கப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் 106 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இன்னும் மறைத்து வைத்துள்ளனர்.

அந்த அறிக்கையை வெளியிடுமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் நான்கு முறை எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

106 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபாயை பகிர்ந்துக்கொண்டவர்களின் விபரங்கள் இருக்கின்றன.

அதில் ரோசி சேனாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்கள் பகிரங்கமாக பேசப்பட்டன. எனினும் பகிரங்கமாகாத பலரது விபரங்கள் அறிக்கையில் உள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அதில் உள்ளன.

அவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் பெயரும் உள்ளது. இதனை தவிர அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது மகள், மகன், மருமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பிணை முறி மோசடியில் சம்பாதித்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் அன்றைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அதில் தொடர்புள்ளது என தெரியவந்தது. அவருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு வழக்ககள் விசாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.