Header Ads



பாலமுனையில் பதற்றம் - 16 பேர் காயம், நடந்தது என்ன...? (வீடியோ)




 - பாறுக் ஷிஹான் -

பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட   பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக  அமைந்துள்ள பொலிஸ்   காவலரண்  பகுதியில்  வியாழக்கிழமை(5) இரவு 11 .30 மணியளவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

 குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்  பொலிஸார் அப்பகுதி வழியாக    தலைக்கவசம் (ஹெல்மெட்  ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை  தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட   சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி  சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


No comments

Powered by Blogger.