நஸீரின் வீட்டுக்கு தீ வைத்த, 16 வயது சிறுவன் உட்பட 15 பேர் கைது - பலர் தலைமறைவு, விமான நிலையத்திலும் ஒருவர் பிடிபட்டார்
கடந்த (10) ம்திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினாரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது சிறுவன் உட்பட 15 பேரை கைதுசெய்தனர்
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுரை 15 பேரை கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்ட பலர் தலை மறைவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்
Post a Comment