Header Ads



அரிசி ஒருகிலோ 1000 ரூபாவைத் தாண்டும், 2000 பேக்கரிகள் மூடப்பட்டன, பாணுக்கும் வரிசை ஏற்படுமாம்..!


எதிர்வரும் காலத்தில்  நாட்டில் அரிசி ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவைத் தாண்டும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு கடுமையான அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் காரணமாக அரிசியின் விலை ஆயிரம் ரூபாவை தாண்டும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கைகளுக்கு உடனடியாக உரங்களை வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

கூடிய விரைவில் மாற்று உணவுப் பயிர்களை நோக்கி பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பாண் வரிசை ஏற்படலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கைக விடுத்துள்ளது. 

தற்போதைய நெருக்கடியில், எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மா பற்றாக்குறையால்  2000இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பேக்கரிகளுக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களை வாங்குவதற்கு  நீண்ட வரிசைகள் நாட்டில் ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


No comments

Powered by Blogger.