Header Ads



சஜித் தரப்புக்கு UNP பச்சைக் கொடி


பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கு முதல் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு, சகல கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையைில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால், ஏற்படும் அதிகார மாற்றத்தால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமரின் பதவி மாற்றத்தின் ஊடாக மற்றுமொரு பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரை அந்த பதவிக்கு நியமிக்காமல் இருப்பது முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.