Header Ads



நாற்காலிகளில் இருந்து வெளியேற ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஒருவார கால அவகாசம்


ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். 

இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். 

இன்று இந்த நடவடிக்கைக்கு சம்மதித்துள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. எனவே, ராஜபக்ச அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். அந்த நாற்காலிகளில் இருந்து வெளியேறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.