Header Ads



Mp க்களை பணம் கொடுத்து வாங்கும் அரசாங்கம், சர்வகட்சி அரசை நிறுவ அழைப்பது வேடிக்கையாக உள்ளது - சஜித்


சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணங்காது எனவும் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் செயற்பாட்டை  அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தங்கோவிட்ட பகுதியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பல்வேறு குழப்பகரமான நிலைமைக்கு மத்தியில், தற்பொழுது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வருமாறு அழைப்பு விடுப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.