Header Ads



திடீரென காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் - உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கோரிக்கை


- அ.அஸ்வர் -


 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள கடற்கரையோரங்கள், தெருவோரங்கள்,  வீடுகள் மற்றும் கடை வாசல்கள், மைதானங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்  எனவும் தமது மோட்டார் சைக்கிள்களை உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் இத்திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. (R)

No comments

Powered by Blogger.