Header Ads



மஹிந்தவுக்கு எதிராக களமிறக்கப்படவுள்ள பிக்குகள் - எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா சஜித்..?


‘மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவிட்டால் கொழும்பை முற்றுகையிடுவோம் , முழு நாடும் முடங்கும் என்று கூறி ஒரு காலத்தில் சந்திரிகாவை அச்சுறுத்திய பௌத்த பிக்குமார், இப்போது  பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த வெளியேறாவிட்டால் நாட்டை முடக்குவோம், அலரி மாளிகையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருக்கின்றனர்...’

சோமராம என்கிற பிக்குவால் பிரதமர் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட வேளை, “நான் கட்டி வைத்த நாய்களை பண்டா அவிழ்த்துவிட்டார். இறுதியில் பண்டாவைக் குதறியது அந்த நாய்கள் தான்” என்றாராம் சேர் ஜோன் கொத்தலாவல...

பிரதமர் பண்டநாயக்க துப்பாக்கியாலும் , பிரதமர் மஹிந்த அச்சுறுத்தலாலும் பதவிகளை இழந்த கதையை வரலாறு எழுதப்போகிறது... இரண்டுக்குமே காரணம் பிக்குமார் என்பதையும் பிற்குறிப்பு சொல்லப்போகிறது...

புதிய பிரதமர் நியமனம் அடுத்த வாரம் நடக்கப்போகிறது...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் இழக்கும் நிலையும் உருவாகியிருக்கிறது..


- Siva Ramasamy -


No comments

Powered by Blogger.