Header Ads



தமது பகுதிகளுக்குச் செல்ல ஆளும் தரப்புக்கு அச்சம் - கொழும்பில் குடும்பத்துடன் வீடுகளிலேயே அடைக்கலம்


எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலை காரணமாக, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கிராம மட்ட போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் அவர்களின் வீடுகளையும் தாக்கலாம் என்ற சந்தேகமே இதற்கு காரணம். 

இது குறித்து பாதுகாப்பு படையினர் அவர்களை எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. 

No comments

Powered by Blogger.