Header Ads



நோன்புப் பெருநாள் அன்று மின்வெட்டு இல்லை


மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனினும், 2ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் மின்வெட்டு 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படவுள்ளது.

அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின் துண்டிப்பு இடம்பெறுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.