Header Ads



அலரி மாளிகைக்குள் குழப்பம், மஹிந்த பிடிவாதம், ஆட்டம் காணும் ஜனாதிபதி - ஹக்கீம் தெரிவிப்பு (வீடியோ)


 - பாறுக் ஷிஹான் -

முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.

வியாழக்கிழமை(28) மாலை முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கியதுடன் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  றவூப் ஹக்கீம்  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதன் போது விஷேட அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர் ,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  தவம், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் உட்பட பள்ளிவாசல் நிருவாகிகள் , மாநகர சபை உறுப்பினர்கள்,  வர்த்தக பிரமுகர்கள், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ,  பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.