Header Ads



இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் - 21 தொடர்பில் முக்கிய பேச்சு


பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.

மேலும், அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.