Header Ads



ஆசிரியை பஹ்மிதாவுக்கு இழைக்கப்பட்ட, கொடூரத்தை கண்டிக்கிறேன் - நீதியமைச்சர் அலி சப்ரி


(அன்ஸிர்)


திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு, அபாயா அணிந்து சென்றமைக்காக  கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கொரூரமானது என வர்ணித்த நீதியமைச்சர் அலி சப்ரி, இதுவொரு தெளிவான இனவாத அடிப்படைவாத செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.


ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் வட்சப் மூலமாக தது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அலி சப்ரி மேலும் குறிப்பிட்டதாவது,


தேசிய பாதுகாப்பின் நலன்கருதி முழுவதுமாக முகத்தை மூடி, நிகாப் அணிவது தவிர்க்கப்பட வேண்டியது. இதைவிடுத்து அபாயா அல்லது ஹிஜாப் அணிவது தடை செய்யப்படாத ஒரு விடயம். இவற்றை அணிவதால் பாதிப்போ அல்லது பங்கமோ ஏற்படப் போவதில்லை.


அபாயாவுக்கு எதிராகவோ அல்லது ஹிஜாப்புக்கு எதிராகவோ இலங்கையின் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கவில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இவற்றுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


பெரும்பான்மை சமூகத்திடமிருந்து உரிமை கோருவதாக கூறும் ஒரு சமூகம், அதனிலும் பார்க்க சிறுபான்மையாக உள்ள ஒரு சமூகத்தின் ஆடை உரிமையில் தலையிடுவதும், அதனை தடுப்பதும் கண்டிக்கத்தக்கது.


மேலும் அப்பாவி மாணவிகளை வீதிக்கு இறக்கியதும் தவறானது. சமூக விவகாரங்களில் இரு சமூகங்களும் பேசித்தான் இணக்கப்பாடு மூலமான தீர்வை எட்ட வேண்டும்.


ஆசிரியை பஹ்மிதாவுக்கு நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அபாயாவுடன் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க அனுமதி  கொடுத்திருக்கையில், அதனை மீறி அவருக்கு எதிராக செயற்பட்டமை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது தெளிவாக புரிகிறது. இதுபோன்ற கடினப்போக்கு செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

5 comments:

  1. நீதி அமைச்சர் என்ற வகையில் நீதியை நிலை நாட்டுங்கள்

    ReplyDelete
  2. You are just condemning the actions verbally. As a minister of justice, what are you going to do about it?

    ReplyDelete
  3. Mr ali sabry neenga thane ABAYA JUBBA FACE COVER ELLAM ARABIC KALAACHHARAM ENDU SONNEENGA.IPPA ENNA ABAYA WUKKU SUPPORT PANREENGA.MAY ALLAH BLESS YOU

    ReplyDelete
  4. You say that you "strongly condemn the atrocity" committed against the teacher Fahmida. Is that all you can do Mr. Minister of Justice? Particularly so, when there is a clear cut case of CONTEMPT of COURT by the School Principal and those who stopped the teacher from taking up her duties as per Court Order?

    And, why did not you use the National Media to issue your Condemnation so that the Despicable action of the Principal of the School is given ALL the PUBLICITY it deserves?

    For reasons Unknown, this VERY IMPORTANT News has NOT been carried by the National Media? WHY, Why, Why?????????

    ReplyDelete

Powered by Blogger.