Header Ads



இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அரபு மொழித்துறை பேராசிரியராக உயர்வு பெறுவது இதுவே முதல் தடவை


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்  அரபு மொழி  பேராசிரியராக  பதவியுயர்தப்பட்டுள்ளார்.  

மாவடிப்பள்ளியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே  ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார். சில காலம் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியில் கற்றதன் பின்னர் இந்தியாவின் லக்னோ தாருள் உலூம் நத்வதுல் உலமா அரபுக் கலாசாயின் அரபு மொழி மற்றும் இலக்கிய பீடத்தில் கற்று முதலாம் நிலை அதிவிஷேட சித்தியுடன் தனது இஸ்லாமிய கற்கையை நிறைவு செய்தார். 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரும் சீர்திருத்தவாதியுமான அல்லாமா அபுல் ஹஸன் நத்வி அவர்களின் நேரடி மாணவராக பேராசிரியர் இருந்துள்ளமை விஷேட அம்சமாகும். 

1999ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் 2002 இல் அரபு மொழியில் விஷேட இளங் கலைமானிப் பட்டத்தை பெற்றார். 2004 ஆம் ஆண்டு அரபு மொழியில் முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதோடு, 2012 ஆம் ஆண்டு உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியியலில் கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தார். பேராசிரியரின் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக்கு விஷேட திறமையை வெளிப்படுத்தியதற்கான

Excellent Award பல்கலைக்கழகத்தால் வழங்கி கெளரவிக்கப்பட்டையும் குறிப்பிடத்தக்க  அம்சமாகும். 

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1945ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது உபவேந்தராக இருந்த Sir Ivor Jennings, Faculty of Orientalism என்பதற்குக் கீழ் அரபு மொழியையும் ஒரு துறையாகக் கொண்டு வந்தார். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இமாம் அவர்கள் அரபு மொழித்த்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் இமாம் அவர்களுக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அரபு மொழித் துறையில் பேராசிரியராக உயர்வு பெறுவது இதுவே முதல் தடவையாகும். 

2 comments:

Powered by Blogger.