Header Ads



பிரியந்தவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது


பாகிஸ்தானின் சியல்கோட்டில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த  பிரியந்த குமார தியவதன தனது அன்பு மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

அவரது திடீர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமய வழிபாடுகளுக்குப் பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 தொடர்ந்து பிரியந்தவின் சடலம் அவரது நண்பர்களால் கணேமுல்ல பொல்ஹேன மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.