Header Ads



இலங்கையில் 60 வீதமானவர்களுக்கு போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லை - உணவு உரிமை கண்காணிக்கும் தேசிய நிறுவனம்


இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போஷாக் கான உணவுகள் கிடைப்பதில்லை என உணவு உரிமை தொடர்பில் கண்காணிக்கும் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுதலின் பின்னர் இவ்வாறு போஷாக்கான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய 10 மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 71 வீதமா னோர் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர் எனவும், 69 வீதமானவர்கள் வாரமொன்றில் ஐந்து நேரம் உணவு உட்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 14 வீதமானவர்கள் வாரமொன்றில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒருவேளை உணவையேனும் பெற்றுக்கொண்டதில்லை என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. TL

No comments

Powered by Blogger.