Header Ads



பிரதமர் மகிந்தவிற்கு மாம்பழங்களை அனுப்பிவைத்த ஷேக் ஹசீனா


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பங்களாதேஷ் மாம்பழங்களை தனது நல்லெண்ண பரிசாக அனுப்பியுள்ளார்.

Dhaka Tribune வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் பிரதமரிடம் மாம்பழங்களை கையளித்துள்ளார்.

இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு, இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அத்துடன், இந்திய ஜனாதிபதி மற்றும் பல முதலமைச்சர்களுக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.  


1 comment:

Powered by Blogger.