Header Ads



நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் அதிரடித் தீர்மானம்

போதைப் பொருளுக்கு எதிராக போராடும் உறுதிமிக்க நிலைப்பாட்டுடன் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அவற்றையே இங்கு காண்கிறீர்கள்.


3 comments:

  1. நிந்தவூர் பள்ளிவாயல் ஒன்றின், பிரக்ஞையற்ற வகையிலான ஒரு அறிக்கை இங்கே பகிரப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் முகமாக அதனோடு தொடர்புபட்டவர்களுக்கான தண்டனைகள் அறிக்கையிடப்பட்டுள்ளது.

    இந்தத் தண்டனைகள் பள்ளிவாயல்கள் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய கடமைகளை மறுப்பதே, அந்தக் கொடிய தண்டனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

    தண்டனைகளை மாத்திரமே முன்வைப்பது ஒரு சர்வாதிகாரச் செயல். அதுபோல், பள்ளிகள் இப்படியான பிரக்ஞையற்ற சட்டங்களை அமுல்படுத்த முன்வரக் கூடாது. குறித்த செயலோடு தொடர்புடையவர்களை அதிலிருந்து மீட்பதற்கான எந்த வழிமுறைகளையும் குறித்து, இந்த அடிப்படைவாதச் சட்டமும் தண்டனையும் குறிப்பிடவில்லை.

    முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், என்பதை மேலும் நிரூபிக்கும் ஒரு செயற்பாடாகவே இதைக் கருதுகிறேன். நெகிழ்ச்சியான சட்டங்களையும், மனிதநேய அனுகுமுறைகளையும் கொண்ட இஸ்லாமிய மரபில், இப்படியான அடிப்படைவாத தண்டனை முறை ஏற்க முடியாத ஒன்றே.

    பள்ளி நிருவாகம் என்பது, மக்களின் தேர்வுகளால் உருவான ஒன்றல்ல. அது ஒரு ஜனநாயக அமைப்புக்கூட அல்ல. முற்றிலும் சர்வாதிகார தன்மை கொண்டது. எளிய மக்களுக்கு அதனோடு எந்தத் தொடர்புகளும் இல்லை. அதன் அதிகார அமைப்பில் ஒருபோதும் அவர்களால் ஒரு அங்கத்தினராக இருக்க முடியாது. அப்படித்தான் இன்றுவரை அந்த அமைப்பு இயங்கிவருகிறது.
    இந்தத் தண்டனை முறை என்பது, மனிதநேயமிக்க தீர்மானமாகத் தெரியவில்லை. இராணுவ நடவடிக்கை போன்றுள்ளது.

    இதெற்கெல்லாம் தண்டனை வழங்க மனிதனுக்கு எந்த அதிகாரத்தையும் இஸ்லாம் வழங்கவில்லை. அவற்றை இறைவனே பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறான்.

    பள்ளி வாயல்கள் மதக்கடமைகளை மக்களுக்கு வழங்குவதை தடை செய்து, அதை ஒரு தண்டனையாகப் பாவிக்க எந்த அதிகாரமும் யாருக்குமில்லை.

    ReplyDelete
  2. Dear members

    Never u can't do this

    Challenging u.

    ReplyDelete
  3. முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்டு போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உண்டு. கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.