முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச் சுறா (படங்கள்)
முல்லைத்தீவு - அளம்பில் வடக்கு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் மற்றுமொறு புள்ளி சுறா ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் கடலாமைகள் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment