நாங்கள் சீனாவிற்கு எதிரானவர்கள் இல்லை, கொழும்பில் பல சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கை - கபீர் Mp
நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் சீனாவிற்கு எதிரானவர்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சில நாடுகளிற்கு எதிரானவர்கள் என சிலர் கருதுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் சீனாவிற்கோ அமெரிக்கா இந்தியாவிற்கோ எதிரானவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மக்களிற்கு துரோகம் செய்வதால், நாங்கள் அதற்கு எதிரானவர்கள் என கபீர்ஹாசிம் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டுடனும் உறவுகளை பேணும்போது இலங்கைக்கு சாதகமான முடிவுகளையே எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களிற்கு விற்பதற்காக செலென்டிவா இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனத்தின் மூலம், கொழும்பில் பல சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் கிரான்ஹயட் ஹோட்டல் கபூர் கட்டிடம், ஹில்டன் ஹோட்டல் ஆகியவற்றை விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment