Header Ads



PCR சோதனை முடிவுகளில் தாமதம், கொரோனா வெளியில் தெரிவிக்கப்படுவதை விட மோசமாக உள்ளது - PHI


பிசிஆர் சோதனை முடிவுகளை வெளியிடுவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனை முடிவுகளை சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்காவிட்டால், எதிர்காலத்தில் பிரச்சினையான நிலை உருவாகக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னரும் இதே தாமதம் காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் கொரோனா வைரஸ்நிலை உண்மையில் வெளியில் தெரிவிக்கப்படுவதை விட மோசமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.